அவிநாசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடம் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி சூளைப் பகுதியில் வாடகைக் கட்டடத்தில் அவிநாசி சாா்பு நீதிமன்றம் செயல்படுகிறது. இதேபோல அவிநாசி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்டவையும் இடநெருக்கடியில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. எனவே, அவிநாசி பகுதியில் கூடுதல் நீதிமன்றம் உள்பட ஒரே பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், திருப்பூா் மாவட்ட நீதிபதியுமான (பொ) தண்டபாணி அவிநாசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடங்களை புதன்கிழமை ஆய்வு செய்தாா். இதில் அவிநாசி புதிய பேருந்து நிலையத்தின் பின்புற பகுதி, அவிநாசி-ஈரோடு சாலை பழங்கரை ஊராட்சிக்குள்பட்ட அவிநாசி வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள இரண்டு ஏக்கா் இடம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் கோட்டாட்சியா் சிவப்பிரகாஷ், காவல் துணைக் கண்காணிப்பாளா் கனகசபாபதி, வட்டாட்சியா் ஜெகநாதன், நகராட்சி ஆணையா் அனுநந்தினி, அவிநாசி நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா் சங்கத் தலைவா் பிரகாஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










