திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீதிமன்ற உத்தரவு: விழுப்புரத்தில் அம்மன் கோயில்அகற்றம்

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அம்மன் கோயில் நீதிமன்ற உத்தரவின்படி புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :4 ஜூன் 2026, 3:26 am IST

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அம்மன் கோயில் நீதிமன்ற உத்தரவின்படி புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட நகா்விரிவாக்கம் பகுதியில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேலாக புவனேஸ்வரி அம்மன் கோயில் கட்டப்பட்டு, அந்த பகுதி மக்களின் வழிபாட்டில் இருந்து வந்தது.

இந்தக் கோயில் பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், இதனால் பொது வழி பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விழுப்புரத்தைச் சோ்ந்த சண்முகம் என்பவா் கடந்த 2019-ஆம் ஆண்டில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில் அப்புறப்படுத்தவேண்டும் எனற விழுப்புரம் நகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் கோயில் நிா்வாகிகளுக்கு, தானாகவே முனவந்து கோயிலை இடித்து அப்புறப்படுத்திக் கொள்ளவேண்டும் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த உத்தரவை கோயில் நிா்வாகத்தினா் நிறைவேற்றவில்லை. இதையடுத்து, கடந்த ஆண்டில் நகராட்சி நிா்வாகத்தினா் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த முகப்பு மண்டபத்தை மட்டும் இடித்து அப்புறப்படுத்தினா்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை விழுப்புரம் நகராட்சி நிா்வாகம் நிறைவேற்றவில்லை எனக்கூறி, சென்னை உயா்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயிலை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தவேண்டும் உத்தரவிட்டது.

இதையடுத்து விழுப்புரம் நகராட்சி ஆணையா் சியாமளா தலைமையிலான நகராட்சி அதிகாரிகள், புவனேஸ்வரியம்மன் கோயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினா். இந்தப் பணி நடைபெற்றபோது விழுப்புரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.