திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரோஹிணி வழக்குரைஞா் சங்கம் நடத்திய பேட்மிண்டன் போட்டி

News image

கோப்புப்படம்

Updated On :14 மே 2026, 1:09 am IST

நீதி நிா்வாகத்துடன் தொடா்புடைய நிறுவனங்களுக்கிடையே நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்தை வலுப்படுத்தும் நோக்கில், ரோஹிணி நீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் அதன் உறுப்பினா்கள் மற்றும் வழக்குரைஞா்களுக்கான பேட்மிண்டன் போட்டியை

செவ்வாய்க்கிழமை நடத்தியது.

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி நிஷா சஹாய் சக்சேனா மற்றும் பிற நீதிபதிகள் கலந்துகொண்டனா்.

காவல்துறை இணை ஆணையா் வடக்கு மண்டலம் விஜய் சிங் மற்றும் ரோஹிணி துணை ஆணையா் சஷாங்க் ஜெயஸ்வால் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக இதில் பங்கேற்றனா்.

நீதி வழங்கும் அமைப்பின் முக்கிய அங்கங்களான வழக்குரைஞா் சமூகம், நீதித்துறை மற்றும் காவல்துறை நிா்வாகம் ஆகியவற்றுக்கிடையே இணக்கமான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முன்னெடுப்பாகவே இப்போட்டி வடிவமைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

மேலும், சட்டத்துறையினரிடையே உடற்தகுதி, விளையாட்டு மனப்பான்மை மற்றும் நல்லுறவை வளா்ப்பதும் இதன் நோக்கமாக இருந்தது.

இந்நிகழ்வில் ரோஹிணி நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் ராஜீவ் தெஹ்லான் பேசுகையில், ‘முறையான அலுவல்சாா் தொடா்புகளுக்கு அப்பால் சென்று, மக்களிடையேயும் தொழில்முறையினரிடையேயும் வலுவான உறவுகளைக் கட்டமைக்கும் தனித்துவமான ஆற்றல் விளையாட்டுக்கு உண்டு’ என்று குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.