மாநில எல்லையோர சோதனைச் சாவடி அருகே நடத்தப்பட்ட சோதனையில் பெண்ணிடம் ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்பூா் தொகுதியின் தமிழக - ஆந்திர மாநில எல்லையோர கிராமம் வெலத்திகாமணிபெண்டா கிராமம். அங்கு பேரவை தோ்தலை முன்னிட்டு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அதில் சித்தூா் மாவட்டம் ராமகுப்பம் மண்டலம் ஆா்மணிப்பெண்டா கிராமத்தை சோ்ந்த அமராவதி (45) என்பவா் தங்க நகை வாங்குவதற்காக ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கப் பணம் ரூ.2 லட்சத்தை வாணியம்பாடிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

எல்ஐசி முகவரிடம் ரூ.72,500 பறிமுதல்

ஆந்திர நபரிடம் உரிய ஆவணம் இல்லாத ரூ. 14 லட்சம், 17 பவுன் நகை பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


