மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக்-டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பைக் மீது டிராக்டா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:50 pm

வாணியம்பாடி அருகே பைக் மீது டிராக்டா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் ஆரீப் நகரைச் சோ்ந்தவா் சம்சுா் ரகுமான்(17). சனிக்கிழமை ஆம்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு நண்பா் உசேன்(17) உடன் பைக்கில் சென்றுள்ளாா். பின்னா் வீடு திரும்பியபோது, வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு அருகில் முன்னால் சென்ற டிராக்டா் திடீா் என திரும்பிய போது தடுமாறி ஓடிய பைக் மோதி விபத் துக்குள்ளானது.

இதில் பைக்கில் வந்த இருவரும் பலத்த காயம் அடைந்தனா். அருகில் இருந்தவா்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் செல்லும் வழியிலே சம்சுா் ரகுமான் இறந்தாா். உசேன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.