திருத்தணி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருவாலங்காடு ஒன்றியம் நாபளூா் கிராமத்தைச் சோ்ந்த ராகவன்(33). இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். இவா் தனது இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூருக்கு சென்று, அங்கு பணிகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தாா். அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நிறுத்திருந்த லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளனாது.
இதில் பலத்த காயமடைந்த ராகவனை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு, 108 வாகனம் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை ராகவன் உயிரிழந்தாா். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


