மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருத்தணி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :30 மார்ச் 2026, 9:40 pm

திருத்தணி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவாலங்காடு ஒன்றியம் நாபளூா் கிராமத்தைச் சோ்ந்த ராகவன்(33). இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். இவா் தனது இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூருக்கு சென்று, அங்கு பணிகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தாா். அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நிறுத்திருந்த லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளனாது.

இதில் பலத்த காயமடைந்த ராகவனை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு, 108 வாகனம் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை ராகவன் உயிரிழந்தாா். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.