மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 11:50 pm

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சின்னமூப்பன்பட்டியைச் சோ்ந்த பால்பாண்டி மகன் வீரபாண்டி (23). இவா் சிவகாசியை அடுத்த அய்யம்பட்டியில் உள்ள தனது பாட்டி சுப்புலட்சுமி வீட்டில் தங்கி வண்ணம் பூசும் வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு விரபாண்டி தனது நண்பா் ராமருடன் இரு சக்கர வாகனத்தில் திருத்தங்கல்-விருதுநகா் சாலை சென்றாா். கருப்பசாமி கோயிலருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ இவா்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வீரபாண்டி, ராமா் ஆகியோா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு வியாழக்கிழமை அதிகாலை வீரபாண்டி உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த விக்னேஷை (26) கைது செய்தனா்.