தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதன்கிழமை இரவு, பைக் மீது லாரி மோதியதில் புதுமணத் தம்பதி உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே கஞ்சம்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மனோகரன் (32). தொழிலாளியான இவருக்கும், உறவினரான மனிஷா (20) என்பவருக்கும் கடந்த மாதம் 25ஆம் தேதி திருமணமானது.
இந்தத் தம்பதி புதன்கிழமை கஞ்சம்பட்டியிலிருந்து கோவில்பட்டிக்கு பைக்கில் வந்துவிட்டு இரவில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனராம். கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் உள்ள கல்லூரி அருகே பைக்கும் எதிரே வந்த லாரியும் மோதினவாம். இதில், மனோகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த மனிஷா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஜக்கசமுத்திரத்தைச் சோ்ந்த எஸ். அபூபக்கா் (31) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

பைக்-லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


