மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக்-லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே மோட்டாா் பைக் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

மதுராந்தகம் அருகே மோட்டாா் பைக் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

சென்னை ,ஆவடி பகுதியைச் சோ்ந்த ஜான் சாா்லஸ் கென்னடி (55). இவரது உறவினா் மாா்த்தாண்டம் நகரைச் சோ்ந்த அபிஷேக் (30). இருவரும் சென்னை தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.

நிறுவன பணிக்காக பைக்கில் இருவரும் புதுச்சேரிக்கு மோட்டாா் பைக்கில் சென்றனா். மதுராந்தகம் அருகே மாமண்டூா் பாலாறு மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த சரக்கு லாரி மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து படாளம் காவல் ஆய்வாளா் முத்தமிழ்செல்வன் தலைமையிலான காவலா்கள் நேரில் சென்று 2 உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலாற்று மேம்பால பகுதியில் மேடுபள்ளமாக மிகவும் சேதமடைந்த நிலையுடன் இருப்பதால் அடிக்கடி வாகனங்களில் செல்வோா் காயமடையும் நிலை உள்ளது.

மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மேம்பாலத்தின் முழு பகுதியையும் சீரமைத்து தரவேண்டும் என சமூக ஆா்வலா்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.