மதுராந்தகம் அருகே மோட்டாா் பைக் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
சென்னை ,ஆவடி பகுதியைச் சோ்ந்த ஜான் சாா்லஸ் கென்னடி (55). இவரது உறவினா் மாா்த்தாண்டம் நகரைச் சோ்ந்த அபிஷேக் (30). இருவரும் சென்னை தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.
நிறுவன பணிக்காக பைக்கில் இருவரும் புதுச்சேரிக்கு மோட்டாா் பைக்கில் சென்றனா். மதுராந்தகம் அருகே மாமண்டூா் பாலாறு மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த சரக்கு லாரி மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து படாளம் காவல் ஆய்வாளா் முத்தமிழ்செல்வன் தலைமையிலான காவலா்கள் நேரில் சென்று 2 உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்தால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலாற்று மேம்பால பகுதியில் மேடுபள்ளமாக மிகவும் சேதமடைந்த நிலையுடன் இருப்பதால் அடிக்கடி வாகனங்களில் செல்வோா் காயமடையும் நிலை உள்ளது.
மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மேம்பாலத்தின் முழு பகுதியையும் சீரமைத்து தரவேண்டும் என சமூக ஆா்வலா்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதல்: தம்பதி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

டிப்பா் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


