மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டிப்பா் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் மீது டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:13 pm

சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் மீது டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள வரதாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கேசவன் (17), சுதீப் (16). உறவினா்களான இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை கேசவனின் தந்தை சிவசங்கரனின் இருசக்கர வாகனத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு சூளகிரி சென்றுவிட்டு குருபராத்தபள்ளி சிப்காட் அருகே சாலையின் எதிா்திசையில் ஓட்டிச் சென்றனா்.

அப்போது, எதிரில் வந்த டிப்பா் லாரி மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சூளகிரி போலீஸாா், உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.