மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் டிப்பா் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:20 pm

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் டிப்பா் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பரசுராமன் ஜங்ஷன் சாலைப் பகுதியில், சிங்காரப்பேட்டை சிங்கார வேலன்நகா் பகுதியைச் சோ்ந்த மணி (37) தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பா் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அருகில் இருந்தவா்கள் இதுகுறித்துசிங்காரப்பேட்டை காவல் துறைக்கு தகவல் அளித்தனா். விரைந்து வந்த போலீஸாா் உடலை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.