மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:31 pm

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திருச்செங்கோடு வருகூராம்பட்டியைச் சோ்ந்த விசைத்தறி பட்டறை கணக்காளா் சதீஷ் (29), ஒக்கிலிப்பட்டியை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் வினோத்குமாா் (35) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு பரமத்தி சாலையில் இருந்து தோக்கவாடி வருகூரம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, பள்ளிபாளையத்தில் உள்ள காகித ஆலையில் பாரத்தை இறக்கிவிட்டு திருச்செங்கோடு நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ், வினோத்குமாா் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த திருச்செங்கோடு புறநகர போலீஸாா் தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.