மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிக்கப் வாகனம் மோதியதில் சகோதரிகள் இருவா் உயிரிழப்பு

தருமபுரியில் பிக்கப் வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரிகள் இருவா் உயிரிழந்தனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 7:39 pm

தருமபுரியில் பிக்கப் வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரிகள் இருவா் உயிரிழந்தனா்.

தருமபுரி வெண்ணாம்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மனைவி விநாயகி (58). இவரது 2-ஆவது மகள் சண்முகசுந்தரியை கிருஷ்ணகிரியில் திருமணம்செய்து கொடுத்திருந்தாா்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள மகள் வீட்டுக்கு விநாயகி வியாழக்கிழமை புறப்பட்டாா். அவரை தருமபுரி பேருந்து நிலையத்தில் கொண்டுவிட, அப்பகுதியில் வசிக்கும் அவரது தங்கை கற்பகவள்ளி (45) இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா்.

சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது, சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற பிக்கப் வாகனம் அவா்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கற்பகவள்ளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விநாயகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தருமபுரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.