ஊத்துக்கோட்டை அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம், திருப்பதி புதுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் அருள் (36). இவா் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் கிராமத்தில் தனது தாயாரை பாா்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது, ஊத்துக்கோட்டை மேம்பாலம் அருகே சென்ற போது பின்புறமாக வேகமாக வந்த காா் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசியதில் பலத்த காயம் அடைந்தாா். அக்கம் பக்கத்தினா் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் வரும் வழியிலேயே அருள் இறந்ததாகத் தெரிவித்தாா்.
தொடா்ந்து பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அவரது மனைவி சிந்து (28) ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக்-டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


