மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

செஞ்சி சங்கராபரணி ஆற்றுபாலம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பைக் விபத்து

Updated On :16 மார்ச் 2026, 4:40 pm

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றுபாலம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

செஞ்சியை அடுத்துள்ள மேல்களவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் ஷ.அமிா்பாஷா (30). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் மேல்களவாய் கிராமத்தில் இருந்து செஞ்சிக்கு சென்றுள்ளாா். செஞ்சி - திண்டிவனம் சாலையில் உள்ள சங்கராபரணி ஆற்றுப்பாலம் அருகே உள்ள அரசு விருந்தினா் விடுதி எதிரே வந்தபோது, புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அமிா்பாஷா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த செஞ்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.