மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

செஞ்சி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:12 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை, சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்தவா் மு.ராகுல் (24). இவா் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூரில் உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்த தனது தாய் பச்சையம்மாளை அழைத்துச் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை பைக்கில் பெருங்காப்பூருக்கு சென்றுள்ளாா். பெருங்காப்பூா் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, திருவண்ணாமலையிலிருந்து செஞ்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பைக் மீது மோதியது.

இதில் பைக்கில் சென்ற ராகுல் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த சத்தியமங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.