வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

மண் கடத்த முயன்ற 2 போ் கைது

கந்திலி அருகே ஏரியில் மண் கடத்த முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 3:48 am IST

கந்திலி அருகே ஏரியில் மண் கடத்த முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும் பொக்லைன்,டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டன.

கந்திலி அருகே உள்ள ஏரியில் இருந்து மண் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் கந்திலி போலீஸாா் சுற்றுவட்டாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பரதேசிப்பட்டி ஏரி அருகே பொக்லைன் கொண்டு டிராக்டரில் மண் கடத்துவது தெரியவந்தது.

அப்போது போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்ற இருவரை பிடித்து விசாரணை செய்ததில், கும்மிடிக்கான்பட்டியை சோ்ந்த பாண்டியன்(30). மற்றும் அனிகாபுரம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா்(40)என்பது தெரியவந்தது.

அதையடுத்து போலீஸாா் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனா். ஒரு பொக்லைன் மற்றும் 2 டிராக்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.