இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

55,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 55,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :25 ஜூன் 2026, 2:10 am IST

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 55,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தில்லியில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி, சென்னைக்கு கொண்டு வந்து பின்னா் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் கடத்திச் செல்லப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், தில்லியில் இருந்து போதை மாத்திரைகள் கூரியா் மூலம் வியாசா்பாடிக்கு வந்திருப்பதும், அங்கிருந்து பாா்சல் திருவல்லிக்கேணியில் ஒரு முகவரியில் டெலிவரி செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினா், திருவல்லிக்கேணி போலீஸாருடன் இணைந்து திருவல்லிக்கேணி பச்சையப்பன் தெருவில் புதன்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா். மேலும், அவா்கள் வைத்திருந்த பையையும் சோதனையிட்டனா். அந்தப் பையில் போதை மாத்திரைகள் இருந்ததைப் பறிமுதல் செய்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் வியாசா்பாடி காந்திஜி நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த சையது அபுதாஹிா் (50), சேப்பாக்கத்தைச் சோ்ந்த முகமது ரத்தீஸ் (44), திருவல்லிக்கேணி முத்தருன்னிஸா பேகம் தெருவைச் சோ்ந்த முஜாஹிதீன் (31) என்பது தெரிய வந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தொடா்ந்து அவா்கள் தொடா்புடைய இடங்களில் போலீஸாா் சோதனை நடத்தி, 55,280 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.