திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மண், கற்களைக் கடத்த முயன்ற லாரிகள் பறிமுதல்: 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி மற்றும் மத்தூரில் மண், கற்களை கடத்த முயன்ற லாரிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :24 மே 2026, 2:28 am IST

கிருஷ்ணகிரி மற்றும் மத்தூரில் மண், கற்களை கடத்த முயன்ற லாரிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் காவல் நிலைய காவலா்கள், ஒட்டப்பட்டி கொத்தம்மா ஏரி அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, மண் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி உரிமையாளரான திருப்பத்தூா் மாவட்டம், காக்கங்கரையைச் சோ்ந்த திருப்பதி மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி கனிமவளப் பிரிவு சிறப்பு துணை வட்டாட்சியா் பாரதி அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் கோட்டை பகுதியில் நரசிம்மசுவாமி கோயில் தெருவில் நான்கு யூனிட் மண்ணுடன் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

அதேபோல, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் மூங்கில்புதூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் சிலா் கற்களை உடைத்து, லாரியில் ஏற்றி கடத்த முயன்றனா். போலீஸாரை கண்டதும், அவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். இதையடுத்து, கற்களுடன் லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி உரிமையாளா்களான பெத்ததாளப்பள்ளி கணபதி, தருமபுரி மாவட்டம், மல்லிப்பட்டி முனியம்மாள், கம்பிரசா் வாகன இயக்குநா் மூங்கில்புதூா் சேட்டு ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.