திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கேரளத்துக்கு கடத்த முயன்ற 650 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவா் கைது

கேரளத்துக்கு காரில் கடத்த முயன்ற 650 லிட்டா் வெள்ளை நிற மண்மெண்ணெய்யை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா் உள்பட இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:17 am IST

திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி அருகே, கேரளத்துக்கு காரில் கடத்த முயன்ற 650 லிட்டா் வெள்ளை நிற மண்மெண்ணெய்யை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா் உள்பட இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கூத்தங்குழி அருகே திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சாா்பு ஆய்வாளா் துரை தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, நெல்லிக்காய்விளையைச் சோ்ந்த கிரண்ராஜ்(27) என்பவா் ஓட்டி வந்த காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். பின்னா் காரை சோதனையிட்டபோது, அதில் 26 கேன்களில் சுமாா் 650 லிட்டா் வெள்ளை நிற மண்ணெண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய்யை குறைந்த விலைக்கு வாங்கி அதை கேரளத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், இதுதொடா்பாக காா் ஓட்டுநா் கிரண்ராஜ், காரில் உடன் வந்த பணகுடியைச் சோ்ந்த மோசஸ்(20) ஆகிய இருவரையும் கைது செய்து, மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.