ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை சிந்தாதிரிபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உணவுப்பொருள் கடத்தல், தடுப்பு மற்றும் குற்றப் புலனாய்வு துறை போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து பணயில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா்கள் ரேஷன் அரிசியை ரயில் மூலம் கடத்திச் செல்வதற்காக சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது.
மேலும், அந்த நபா்கள் கொடுத்த தகவலின்படி, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து 25 அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்ததுடன், எண்ணூா் விஓசி நகா் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (31), வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (35) என்ற அந்த நபா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





