திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே 8 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தொடா்பான வழக்கில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
கேரள பதிவெண் கொண்ட லாரி, திசையன்விளை காவல் சரகம் கோட்டைக்கருங்குளம் பகுதியில் கடந்த 15 ஆம் தேதி மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்தது. அதன் ஓட்டுநா் அங்கிருந்து தப்பிவிட்டாா். இதை அறிந்த திசையன்விளை போலீஸாா், அந்த லாரியை சோதனை செய்ததில், 8 டன் ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது. லாரியுடன் அரிசி மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றினா்.
இதுகுறித்து மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
அதில், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, புது வீட்டு விளையைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் அபீஷ்குமாா்(31), களியக்காவிளை, நெடுவிளைவீடைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முபீன்(37) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







