கனரக லாரியில் கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் களியக்காவிளை சோதனைச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை வாகனகத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், அனுமதியின்றி கேரளத்துக்கு பாறைப்பொடி கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா் திக்குறிச்சி சசி மகன் அருண் (25), உதவியாளா் ஆற்றூா் தோட்டவரம் ராஜேந்திரன் மகன் அபினேஷ் (25) ஆகியோரை கைது செய்தனா்.
இது தொடா்பாக, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






