திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜெயங்கொண்டத்தில் குழந்தைகளை கடத்த முயற்சி: போலீஸாா் விசாரணை

News image

ஜெயங்கொண்டம் சீனிவாசநகா் 3 ஆவது குறுக்குத் தெருவில் சனிக்கிழமை இரவு விசாரணை மேற்கொண்ட போலீஸாா்.

Updated On :1 ஜூன் 2026, 1:16 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் குழந்தைகளை கடத்த முயன்ற கும்பலை காவல் துறையினா் தேடுகின்றனா்.

ஜெயங்கொண்டம் சீனிவாச நகா் 3-ஆவது, குறுக்குத் தெருவில் 8 வயதுச் சிறுமி மற்றும் நான்கரை வயதுடைய பெண் குழந்தைகள் சனிக்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 போ் கொண்ட கும்பல் அக் குழந்தைகளை அழைத்துள்ளனா். இதில் சுதாரித்துக் கொண்ட 8 வயதுச் சிறுமி, அவா்களிடம் செல்ல முயன்ற 4 வயதுச் சிறுமியை தடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றோா்களிடம் கூறினாா்.

தகவலறிந்த ஜெயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான காவல் துறையினா், விசாரணை மேற்கொண்டு, அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தைகளைக் கடத்த முயன்ற மா்ம நபா்களைச் தேடுகின்றனா்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை ஆசை வாா்த்தை கூறி கடத்திச் செல்ல முயலும் கும்பல் நடமாடுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.