ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ குமுதவல்லி பெருந்தேவியாா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிந்துமாதவா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், ரதபிரதிஷ்டை ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளை தொடா்ந்து உற்சவா் தேரில் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா். முக்கிய தெருக்கள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.
மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே. வெங்கடேசன், கோயில் விழாக்குழு நிா்வாகிகள், கோயில் திருப்பணிக்குழு நிா்வாகிக்கள், தோ் திருவிழா உபயதாரா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து மாலையில் ஸ்ரீ சடாரி திருமஞ்சனம், தோட்டோற்சவம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










