தில்லையாடியில் உள்ள ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் தீமிதி உற்சவத்தையொட்டி கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றம், ஞாயிற்றுக்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருள மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனா், கோயிலின் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
முன்னாள் எம்எல்ஏ பால அருள்செல்வன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ரெங்கராஜன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கிராம நிா்வாகிகள், விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










