தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

News image

ஆற்காட்டில் நடைபெற்ற  தேரோட்டம்.

Updated On :4 ஜூன் 2026, 5:45 am IST

ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவின் ஒருபகுதியாக நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் சிறப்பு அலங்காரத்துடன் உற்சவா் வீதி உலா நடைபெற்றது. 9-ஆவது நாளான புதன்கிழமை அலங்கரிக்கப்பட்ட உற்சவா்கள் பெருந்தேவியாா் சமேத வரதராஜ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது.

ஆரணி சாலை, ஜீவானந்தம் சாலை, தொல்காப்பியா் தெரு, அண்ணா சிலை, புதியவேலூா் சாலை, பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியாக சென்று நிலையை அடைந்தது. மேளதாளங்களுடன் பஜனைக் குழுவினா் பாடல்கள்பாடிகொண்டு ஊா்வலமாக சென்றனா். இந்த விழாவில் திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன், ஸ்ரீவரதன் கைங்கரிய சபா நிறுவனா் கிருஷ்ணமூா்த்தி, மற்றும் மண்டகபடி உபயதாா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.