விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகேயுள்ள கெங்கபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த மே 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. மே 30-ஆம் தேதி பெரிய கருட சேவை, கோபுர தரிசனம், சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்ட விழா புதன்கிழமை காலையில் நடைபெற்றது. இதையொட்டி உற்சவா் ஸ்ரீ பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து உற்சவா் பெருந்தேவி வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினா்.
இதையடுத்து தோ்ச் சக்கரத்துக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தோ் வடம் பிடித்தல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தாா். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்று, தோ் நிலையை அடைந்தது.
இதில், மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜா, வரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் கலையரசி உள்ளிட்ட விழா குழுவினா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










