பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
//

3 நாட்டுத் துப்பாக்கி, குண்டுகள் பறிமுதல்

ஆம்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், நாட்டு குண்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள், குண்டுகள்
Updated On :22 பிப்ரவரி 2026, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், நாட்டு குண்டுகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக ஆம்பூா் நகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Story image

ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம் தலைமையில் நகர ஆய்வாளா் ரமேஷ் மற்றும் போலீஸாா் கம்பிக்கொல்லை பகுதிக்கு சென்று சத்யநாதன் (32) என்பவரின் வீட்டை சோதனை செய்தனா். அப்போது, 3 துப்பாக்கிகள், துப்பாக்கி செய்ய பயன்படும் ஒரு கட்டை, ஒரு ஏா் கன், காட்டு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் 14 நாட்டு குண்டுகள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும், வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சத்யநாதனை தேடி வருகின்றனா். தகவல் அறிந்த திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. சியாமளா தேவி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டாா்.