டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தளி அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

News image
கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன்.
Updated On :21 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

தளி அருகே 2 நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் தளி காவல் உதவி ஆய்வாளா் ராஜா சங்கிலி கருப்பன், தனிப்பிரிவு காவலா்கள் சரவணன், லட்சுமணன் ஆகியோா் கொண்ட தனிப்படையினா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, திம்மேனட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் (65) என்பவா் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை செய்தனா்.

இவா் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருவதாகவும், விலங்குகளை வேட்டையாட உரிமையில்லாத நாட்டுத் துப்பாக்கியை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவரிடமிருந்து உரிமம் இல்லாத இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் இரண்டு பேரல்கள், கட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்து, ராமச்சந்திரனை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.