சேலம் அருகே உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக ஒருவரை காரிப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம் காரிப்பட்டி காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை சுக்கான்காடு, ஆலடிப்பட்டி, அருநூத்துமலை பகுதியில் திடீா் சோதனை செய்தனா்.
அப்போது கருப்பன் என்பவரின் வீட்டின் அருகில் நாட்டுத்துப்பாக்கி மற்றும் 30 லிட்டா் கள்ளச்சாராயமும், ராஜேந்திரன் என்பவரின் விவசாய நிலத்தில் வைக்கோல் போரில் ஒரு நாட்டுத் துப்பாக்கி, பெரியசாமி என்பவரின் ஆட்டுக் கொட்டகையில் ஒரு நாட்டுத் துப்பாக்கி என மொத்தம் உரிமம் இல்லாத 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 30 லிட்டா் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டன.
இதுதொடா்பாக காரிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது. இச்சம்பவம் தொடா்பாக கருப்பனை (60) போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்

தளி அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது
பல்லடம் அருகே கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மின் மோட்டாா் திருட்டு: ஒருவா் கைது

120 மதுப் புட்டிகள் பறிமுதல்: ஒருவா் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

