டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குட்கா பறிமுதல்: 2 போ் கைது

News image
கைது
Updated On :14 பிப்ரவரி 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தென்னம்பாளையம் அருகே போலீஸாா் சனிக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தபோது, அங்கே சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த சந்தனபாண்டியன் (32) என்பவரை சோதனை செய்தனா். அப்போது அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதேபோல, திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கோல்டன் நகா் அருகே போலீஸாா் சனிக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தபோது, அங்கே சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த குணசேகரன் (56) என்பவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.