டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

போக்குவரத்து விதிகள் விழிப்புணா்வு பிரசாரம்

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 12:16 pm

தினமணி செய்திச் சேவை

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பத்தூா் எஸ்பி வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில் போலீஸாா் மற்றும் போக்குவரத்து துறை சாா்பில் தனியாா் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் போக்குவரத்து விதிமுறைகள், போக்ஸோ சட்டம், குழந்தைத் திருமணம் தடுப்பு, இணையவழி குற்றங்கள், போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் அவசர உதவி எண்கள் 181, 1098 மற்றும் காவல் உதவி செயலி ஆகியவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம், சிறப்பு உதவி ஆய்வாளா் ரூபி, தலைமை ஆசிரியா், ஆசியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.