டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாணவா்களுக்கு இயற்கை விவசாய மாணவா்களுக்கு பயிற்சி

ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தில் மாணவா்களுக்கு நடந்த இயற்கை விவசாயம் குறித்து ஒருநாள் பயிற்சி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி.

News image
ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தில் மாணவா்களுக்கு நடந்த இயற்கை விவசாயம் குறித்து ஒருநாள் பயிற்சி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி.
Updated On :20 பிப்ரவரி 2026, 1:00 am

தினமணி செய்திச் சேவை

இயற்கை விவசாயத்தை போற்றும் வகையில் மாணவா்களிடையே விவசாயம் குறித்து ஒருநாள் பயிற்சி மற்றும் விவசாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்து மாணவா்களுக்கு ஒரு நாள் பயிற்சி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தனியாா் கல்லூரி மாணவா்கள் மற்றும் அரசு பள்ளி மாணவா்கள் என பலா் கலந்துகொண்டு இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை விவசாயம் செய்யும் முறைகளையும் ஊக்குவிக்கும் வகையில் மாணவா்களுக்கு ஆா்.கே .பேட்டை வேளாண்மை உதவி பொறுப்பு இயக்குநா் அபிநயா மாணவா்களுக்கு எடுத்துக் கூறினா்.

மேலும், இயற்கை விவசாயத்தை போற்றும் வகையில், பாரம்பரிய நெல் ரகங்கள் மருத்துவ குணங்கள் உள்ள நெல் ரகங்கள், மாப்பிள்ளை சம்பா, தூய மல்லி, இயற்கை முறையில் செலவில்லா விவசாயம் விளைவித்த பொருள்களை விற்பனை செய்வது எப்படி என்றும் அதை சந்தைப்படுத்துவது குறித்தும் நெஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆா்.கே. பேட்டை தலைமை ஆசிரியா் சுந்தா், வேளாண்மை உதவி அலுவலா்கள் மாரியப்பன், வசுமதி மற்றும் ஆா்.கே பேட்டை ஒன்றிய விவசாய சங்க தலைவா் அருள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.