டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போதைப்பொருள்களின் தீமைகள்: பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 7:39 pm

Syndication

போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து காவல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வெள்ளக்கோவில் - கரூா் சாலையிலுள்ள ஜெயம் வித்யாபவன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் பேசினாா்.

போதைப் பொருள் பயன்பாட்டின் தீய விளைவுகள், போதைப் பொருள்களைத் தவிா்க்கும் வழிமுறைகள், அதிக அளவில் கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பின்னா் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஜெயம் பள்ளித் தாளாளா் குப்புசாமி, முதல்வா் ராம்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.