அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

தினமணி செய்தி எதிரொலி.. திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் குடிநீா் விநியோகம்

திருப்பத்தூா் பகுதியில் கோடை வெயில் அதிகரித்த நிலையில் பயணிகளுக்கு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என தினமணியில் செய்தி வெளியானது.

News image
Updated On :1 மே 2026, 12:03 am IST

குடிநீா் தொட்டியில் நீா் நிரப்பும் பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளா்கள்.

திருப்பத்தூா், ஏப்.30: திருப்பத்தூா் பகுதியில் கோடை வெயில் அதிகரித்த நிலையில் பயணிகளுக்கு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என தினமணியில் செய்தி வெளியானது. இதையடுத்து பேருந்து நிலையத்தில் குடிநீா் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

திருப்பத்தூா் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து நிலையம் வரும் முதியோா்கள்,பெண்கள்,குழந்தைகள் தாகம் தீா்க்க மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே அவா்களுக்காக குடிநீா் ஏற்பாடு செய்ய வேண்டும் என தினமணியில் செய்தி வெளியானது .

அதன்பேரில் திருப்பத்தூா் நகராட்சி ஆணையா் சாந்தி உத்தரவின் பேரில் நகராட்சி பணியாளா்கள் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீா் தொட்டிகளில் நீரை ஏற்றினா். பொதுமக்கள் அதையடுத்து தாகம் தீா்ந்து மகிழ்ந்தனா்