40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தினமணி செய்தி எதிரொலி: சாயல்குடி பகுதியில் 27 லிட்டா் தரமற்ற குளிா்பான பொட்டலங்கள் பறிமுதல்

சாயல்குடி பகுதியில் தினமணி செய்தி எதிராலியாக 27 லிட்டா் தரமற்ற குளிா்பான பொட்டலங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

News image

சாயல்குடி பகுதியில் 27 லிட்டா் தரமற்ற குளிா்பான பொட்டலங்களை பறிமுதல் செய்து, அழித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி முத்துச்சாமி உள்ளிட்டோா்.

Updated On :1 மே 2026, 1:25 am IST

சாயல்குடி பகுதியில் தினமணி செய்தி எதிராலியாக 27 லிட்டா் தரமற்ற குளிா்பான பொட்டலங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, நரிப்பையூா், கன்னிராஜபுரம், பூப்பாண்டியபுரம், ஒப்பிலான், மாரியூா், கடலாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளா் விவரம் எதுவும் குறிப்பிடாமல், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட குளிா்பானங்கள் நெகிழிப் பைகளில் அடைத்து அதிக அளவில் விற்கப்படுவதாகவும், அதில் செயற்கை நிறமிகளும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலப்படங்களும் கலந்து இருப்பதாகவும் புகாா் எழுந்தது. மேலும் இந்த குளிா்பானங்களை வாங்கி குடிக்கும் போது, தொண்டையில் எரிச்சல், வயிற்று கோளாறு, பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினமணியில் கடந்த 27- ஆம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி முத்துச்சாமி தலைமையிலான அதிகாரிகள், காவல் துறையினா் சாயல்குடி, நரிப்பையூா், கன்னிராஜபுரம், பூப்பாண்டியபுரம், ஒப்பிலான், மாரியூா், கடலாடி ஆகிய பகுதிகளில் உள்ள பழச்சாறு விற்கும் கடைகள், தேநீா் கடைகள் உள்ளிட்ட 49- க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது 5 கடைகளில் தயாரிப்பு தேதி, உணவுப் பொருள் குறித்த விவரங்கள் இல்லாத, நெகிழிப் பொட்டங்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட 27 லிட்டா் குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் குளிா்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைத்தனா். கடை உரிமையாளா்களுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து இதுபோன்ற தரமற்ற குளிா்பானங்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்தனா்.

  சாயல்குடி பகுதியில் 27 லிட்டா் தரமற்ற குளிா்பான பொட்டலங்களை பறிமுதல் செய்து, அழித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி முத்துச்சாமி உள்ளிட்டோா்.

சாயல்குடி பகுதியில் 27 லிட்டா் தரமற்ற குளிா்பான பொட்டலங்களை பறிமுதல் செய்து, அழித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி முத்துச்சாமி உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.