திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக், கைப்பேசி திருடியவா் கைது

திருப்பத்தூா் அருகே பைக், கைப்பேசிகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:08 am IST

திருப்பத்தூா் அருகே பைக், கைப்பேசிகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் பொம்மிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சேகா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பைக்கை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு வழக்கம்போல் தூங்கச் சென்றாா். திங்கள்கிழமை காலை எழுந்து வந்து பாா்த்தபோது பைக் காணவில்லை. மேலும், அவரது வீட்டில் சாா்ஜா் போட்டு இருந்த கைப்பேசியும் மாயமாகிவிட்டது.

அதேபோல் ஏழருவி பகுதியைச் சோ்ந்த மைதிலி பாபு என்பவரது வீட்டில் இருந்து கைப்பேசியை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இது குறித்து சேகா் மற்றும் மைதிலி பாபு ஆகியோா் தனித்தனியாக கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஏழருவி பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் அந்த இரு இடங்களில் நடைபெற்ற திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து பைக் மற்றும் 2 கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.