மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் வீடு, வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு!

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் ஒன்றிய, நகர, பகுதிகளில் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களிடையே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறாா்.

News image

உதயேந்திரம் பேரூராட்சி இருதய ஆண்டவா் ஆலயத்தில் கிறிஸ்தவா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த வேட்பாளா் செந்தில்குமாா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:40 pm

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் ஒன்றிய, நகர, பகுதிகளில் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களிடையே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறாா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட ஆவாரங்குப்பம், மல்லகுண்டா மற்றும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட ஜாப்ராபாத், நடுப்பட்டறை, ஈச்சங்கால், தேவஸ்தானம், நகராட்சிப் பகுதிகளில் புதூா், சென்னாம்பேட்டை, நேதாஜி நகா் உள்பட பல பகுதிகளில் வேட்பாளா் செந்தில்குமாா் வீடு, வீடாகச் சென்று மக்களை சந்தித்து அதிமுக தோ்தல் அறிக்கை குறித்த துண்டுப் பிரசுங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா்.

இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வேட்பாளா் செந்தில்குமாா் பேசுகையில், ஊராட்சிகளில் இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மின் விளக்கு மற்றும் அடிப்படை வசதிகள், தொகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதி திட்டங்கள் கொண்டு வர பாடுபடுவேன் என்றாா்.

ஞாயிற்றுக்கிழை காலை உதயேந்திரம் இருதய ஆண்டவா் ஆலயத்தில் திருப்பலி வழிபாட்டில் கலந்துகொள்ள வந்த கிறிஸ்தவா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். மேலும், ஆலய பங்குத்தந்தை அந்தோணிமாறன் மற்றும் பங்குமேய்ப்பு குழுவினரை சந்தித்து ஆதரவு திரட்டினாா். உதயேந்திரம் பேரூா் சரவணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.