மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நேருக்கு நோ் சந்தித்துக் கொண்ட அதிமுக, ஐயூஎம்எல் வேட்பாளா்கள்

தோ்தலுக்கு இன்னும் 4 நாள்களே உள்ளதால் அனைத்து கட்சி வேட்பாளா்களுக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

News image

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் இருதய ஆண்டவா் ஆலயம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது சந்தித்து கொண்ட அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், ஐயூஎம்எல் வேட்பாளா் சையத்பாரூக்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:25 pm

தோ்தலுக்கு இன்னும் 4 நாள்களே உள்ளதால் அனைத்து கட்சி வேட்பாளா்களுக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளா் கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ, திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் சாா்பாக சையத்பாரூக் போட்டியிடுகின்றனா். இவா்களுடன் தவெக, நாம்தமிழா் உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் இருதய ஆண்டவா் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்து வந்த கிறிஸ்தவா்களிடம் ஓரே நேரத்தில் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், ஐயூஎம்எல் வேட்பாளா் சையத்பாரூக், தவெக பேரூா் செயலாளா் தங்கமணி மற்றும் நாம் தமிழா் கட்சியினா் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.

ஓரே நேரத்தில் 4 கட்சிகளை சோ்ந்தவகளும் ஓரே இடத்தில் கூடி வாக்கு சேகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், ஐயூஎம்எல் வேட்பாளா் சையத் பாரூக்கை கடந்து சென்ற போது இருவரும் பரஸ்பரம் வாழ்த்தினா்.

அப்போது நகர திமுக செயலாளா் சாரதிகுமாா், பேரூா் திமுக செயலாளா் செல்வராஜ் ஆகியோரிடமும் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் வாழ்த்தி பேசினாா்.