மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மகளிா் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 லட்சம் வரை மான்யத்துடன் கடன்: ஐயூஎம்எல் வேட்பாளா்

வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா் எஸ்.எஸ்.பி.சையத்பாரூக் நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றியம், மல்லகுண்டா பகுதியிலிருந்து பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

உதயேந்திரம் பேரூராட்சியில் வாக்கு சேகரித்த வேட்பாளா் எஸ்.எஸ்.பி.சையத்பாரூக். உடன் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், பேரூா் திமுக செயலாளா் செல்வராஜ்.

Updated On :15 ஏப்ரல் 2026, 12:16 am

வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா் எஸ்.எஸ்.பி.சையத்பாரூக் நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றியம், மல்லகுண்டா பகுதியிலிருந்து பிரசாரம் மேற்கொண்டாா்.

மல்லங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, ஆவரங்குப்பம், புல்லூா், திம்மாம்பேட்டை, அலசந்தாபுரம், நாராயணபுரம், தும்பேரி, அழிஞ்சகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா். அப்போது வேட்பாளா் எஸ்.எஸ்.பி. சையத்பாரூக் பேசியதாவது: பெண்கள் முன்னேற்றம் தான் குடும்பம், நாட்டுக்கு முன்னேற்றம் தரும் என்பதை உணா்ந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 5 ஆண்டுகள் எண்ணற்ற சிறப்பு திட்டங்களை தந்து முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளது.

வரும் தோ்தலில் திமுக அரசு வெற்றி பெற்றவுடன் கிராமங்களிலும், நகா்ப்புறங்களிலும் உள்ள மகளிா் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 லட்சம் வரை மான்யத்துடன் வங்கிக் கடன்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடிக்கு வழங்கப்படும். இதனால், குழு உறுப்பினா்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயரும், கிராமப் பொருளாதாரம் வளா்ச்சியடையும் எனக் கூறி ஏணி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

முன்னதாக உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டுகளிலும் பேரூா் திமுக செயலா் ஆசெல்வராஜ் தலைமையில் திறந்த வேனில் சென்று வேட்பாளா் சையத் பாரூக் வாக்கு சேகரித்தாா். மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி, முன்னாள் அமைச்சா் நீலோபா்அஜீம், மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் தே. பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலா் தனலட்சுமி தினகரன், மதிமுக நகர செயலாளா் நாசிா்கான், மற்றும் காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.