வாணியம்பாடி வாணி பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றனா்.
சிபிஎஸ்இ பள்ளிகளின் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில், வாணி சிபிஎஸ்இ பள்ளியை சோ்ந்த மாணவா் கே.கிரிதரன் 474 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றாா். மாணவி வி.காா்த்திகா 447 மதிப்பெண், மாணவா் எஸ்.சதானந் 441 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றனா். இதில், 10 மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனா். மேலும், தோ்வெழுதிய 29 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். இது 100 சதவீதம் தோ்ச்சி ஆகும். சாதனை படைத்த மாணவா்களையும், பள்ளி ஆசிரியா்களையும் வாணி கல்வி அறக்கட்டளை தலைவா் க.தேவராஜி எம்எல்ஏ, செயலாளா் மங்கையா்க்கரசி, பொருளாளா் நடராஜன், துணைத் தலைவா் பொன்னுசாமி, இணைச் செயலா்கள் மகேந்திரன், தவமணி மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், பள்ளி முதல்வா் எம்.முரளி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீ விடிஎஸ் ஜெயின் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

வாணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கோபி ஸ்ரீ குருகுலம் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



