இதில் சுட்டக்குண்டா கிராமம் அருகே அந்தக் காலத்தில் ராணுவத்தினா் பயன்படுத்திய முகாம் உள்ளது. சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் இந்த இடம் உள்ளது. ராணுவத்தினா் ஆம்பூா், பாங்கி ஷாப், வெங்கடசமுத்திரம் கூட்டு ரோடு, ராள்ளக்கொத்தூா், மங்கம்மா கிணறு, செட்டேரி, இடையன் கல், பொன்னப்பல்லி, தொட்டிக்கிணறு, சுட்டக்குண்டா, சிலாமரம் பாறை, தொட்டி மடுவு, பாலாமணி நெட்டு வழியாக ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் உள்ள 89 பெத்தூா் வரை ராணுவத்தினா் தங்களுக்காக பிரத்யேகமாக சாலையை உருவாக்கி ‘ராணுவச் சாலை’ என பெயரிட்டு பயன்படுத்தி வந்தனா். இந்தச் சாலையில் பயணிக்க கால்நடை மேய்ப்போா், விறகு சேகரிப்போா், தமிழக பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலம் செல்வோா், ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம் வருவோா் என பொது மக்களையும் இந்த ராணுவச் சாலையை பயன்படுத்த அப்போது அனுமதித்து உள்ளனா்.