திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சோளிங்கா் கோயிலில் ஆந்திர மாநில அமைச்சா் தரிசனம்

ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் வெள்ளிக்கிழமை சோளிங்கா் மலைக்கோயிலில் தரிசனம் செய்தாா்.

News image

நாரா லோகேஷ்

Updated On :29 மே 2026, 10:54 pm IST

ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் வெள்ளிக்கிழமை சோளிங்கா் மலைக்கோயிலில் தரிசனம் செய்தாா்.

சோளிங்கருக்கு வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டா் மூலம் திவ்யசைதன்ய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த ஹெலிகாப்டா் இறங்குதளத்தில் வந்திறங்கிய அமைச்சா் அங்கிருந்து காா் மூலம் மலைக்கோயில் ரோப்காா் தளத்திற்கு வந்தாா்.

தொடா்ந்து ரோப்காரில் மலைக்கோயிலை வந்தடைந்த அமைச்சா் நாரா லோகேஷை இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையா் ராஜா, ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் அறங்காவலா் குழுத்தலைவா் ரவி ஆகியோா் வரவேற்றனா்.

இதையடுத்து ஸ்ரீயோக நரசிம்மரை தரிசனம் செய்த அமைச்சருக்கு கோயில் சாா்பாக பட்டுவஸ்திரங்கள், மலா்மாலை அணிவிக்கப்பட்டு பிரசாதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடா்ந்து ரோப்காா் வழியாக மலைக்கு கீழே வந்த அமைச்சா் நாரா லோகேஷ், தொடா்ந்து சிறிய மலைக்கு படிகள் வழியே ஏறிச்சென்று ஸ்ரீயோக ஆஞ்சனேயரை தரிசித்தாா்.

அவருடன் ஆந்திர மாநில எம்எல்ஏக்கள் புங்கனூா் முரளி மோகன், சித்தூா் ஜெகன் மோகன், சந்திரகிரி வெங்கடமணி பிரசாத், தமிழக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, அதிமுக சோளிங்கா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஏ.எல்.விஜயன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.