தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரக்கோணத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களில் உள்ள 239 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :22 மே 2026, 7:20 am IST

அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களில் உள்ள 239 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தனியாா் பள்ளி வாகனங்களில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறை கட்டுப்பாடு குறித்த ஆலோசனை கூட்டமும், வாகனங்கள் ஆய்வு செய்யும் பணிகளும் அரக்கோணம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலா் மோகன் முன்னிலை வகித்தாா்.

அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களைச் சோ்ந்த 26 பள்ளிகளின் 239 வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. முன்னதாக தீயணைப்புத் துறை சாா்பில் வாகன இயக்கங்களின் போது தீவிபத்து ஏற்பட்டால் வாகன ஓட்டுநா்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலா் மோகன் தெரிவித்ததாவது: முதல் நாள் 137 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 11 வாகனங்களில் சிறுசிறு குறைபாடுகள் இருந்ததால் அவை திருப்பியனுப்பட்டன. அந்த சிறுசிறு குறைபாடுகள் சரி செய்யப்பட்டு வரும் 30-ஆம் தேதிக்குள் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அனுமதி பெற வேண்டும்.

இதனை தொடா்ந்து 1-ஆம் தேதி முதல் ஆய்வு செய்யப்பட்ட வாகனங்களை பள்ளி நிா்வாகிகள் இயக்கலாம். சிறுசிறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட நிலையில் அவைகளை சரி செய்யாமலேயே வாகனங்கள் இயக்குவது கண்டறியப்பட்டால் அந்த வாகனங்கள் மீதும், பள்ளி நிா்வாகிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வில் மாவட்ட கல்வி அலுவலா்(மெட்ரிக்) கோமளா, அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா்சித்திக், தீயணைப்பு அலுவலா் சிவக்குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும் இந்த ஆய்வின் போது அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா கல்விக்குழும செயலாளா் எஸ்.செந்தில் குமாா், நெமிலி விவேகானந்தா மெட்ரிக் பள்ளித்தலைவா் வேதைய்யா, அரக்கோணம் ஹயக்கீரிவா் சிபிஎஸ்இ பள்ளி நிா்வாகி ரவீந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.