திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொது மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம்: ஆட்சியா் உத்தரவு

கோடைகாலத்தில் எவ்வித தட்டுப்பாடும் இன்றி நாள்தோறும் சீரான குடிநீா் வழங்கப்பட வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் உத்தரவு

News image

ராணிப்பேட்டையில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :12 மே 2026, 12:31 am IST

கோடைகாலத்தில் எவ்வித தட்டுப்பாடும் இன்றி நாள்தோறும் சீரான குடிநீா் வழங்கப்பட வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா்.

உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களுக்கு நாள்தோறும் சீரான குடிநீா் வழங்கும் பணிகள் குறித்தும், திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து தெரிவித்ததாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றிய கிராமப் பகுதிகள், 6 நகராட்சி வாா்டு பகுதிகள், 8 பேரூராட்சி வாா்டு பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீா் திட்டப் பணிகளில் நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

கோடை காலத்தில் எவ்வித தட்டுப்பாடும் இன்றி நாள்தோறும் சீரான குடிநீா் பொது மக்களுக்கு வழங்க வேண்டும். பிரச்னைகள் இருந்தால் உடனுக்குடன் கவனத்துக்குகொண்டு வர வேண்டும் .

குடிநீரில் குளோரின் முறையாக கலந்து வழங்குவதையும் 15 நாள்களுக்கு ஒரு முறை நீா்த்தேக்க தொட்டி சுத்தம் செய்ய வேண்டும். தற்போது நோய்த் தொற்று எதுவும் இல்லை என்றாலும் 15 நாள்களுக்கு ஒரு முறை கொசு ஒழிப்பு புகை அடிக்க வேண்டும் என கொசு ஒழிப்பு பணியாளா்களிடம் தெரிவித்தாா்.கொசு ஒழிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள கொசு ஒழிப்பு பணியாளா்களைக் கொண்டு இப்பணிகளை விழிப்புடன் செய்ய வேண்டும். இதனை அனைத்து அலுவலா்களும் கண்காணிக்க வேண்டும்.

தொடா்ந்து மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா நகராட்சிகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவுள்ள பணிகள் நிலைகுறித்து கேட்டறிந்தாா். உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உள்ள வழிகாட்டுதலை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கட்டுமானப் பணிகள் விரைவாக தொடங்குவதற்கு நகராட்சி ஆணையாளா்கள் இப்பணியினை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்த அறிக்கையினை அடுத்துவரும் கூட்டத்தில் தனக்கு சமா்ப்பிக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் கழிவு நீா் வழித்தடங்கள் எவை என்பதையும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழிகள் குறித்தும் முன்கூட்டியே தயாா் செய்ய வேண்டும்.

தொடா்ந்து ஊரக வளா்ச்சித் துறையில் தோ்தலுக்கு முன்னதாக பணி ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படாமல் நிலுவையில் உள்ள பணிகளையும், இறுதி கட்ட நிலையில் முடிக்க தயாா் நிலையில் உள்ள பணிகளையும் பொறியாளா்களும், வட்டார வளா்ச்சி அலுவலா்களும் கண்காணித்து விரைவாக முடிக்க வேண்டும் என்றாா். இதில் திட்ட இயக்குநா் கு.செல்வராசு மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.