கூடலூா் நகராட்சிக்குள்பட்ட கோத்தா்வயல் பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சி, கோத்தா்வயல் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு கடந்த 13 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதனால், அவதியடைந்து வரும் மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், குடிநீருக்காக காலிக் குடங்களுடன் பொதுக் குழாய்க்கு அருகே காத்துக் கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது
எனக்கூறிய மக்கள், சீரான குடிநீா் விநியோகம் செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










