திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நந்திநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய கோரிக்கை

தருமபுரி அருகே நந்திநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :28 மே 2026, 2:07 am IST

தருமபுரி அருகே நந்திநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நந்திநகா் குடியிருப்பு வாசிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

தருமபுரி நகரையொட்டி இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நந்தி நகரில் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மூன்று மேல்நிலைநீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த நீா்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ,கோடை காலத்தில் நந்திநகா் குடியிருப்பு வாசிகள் தண்ணீா் விநியோகம் இன்றி மிகந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, பொதுமக்களின் சிரமத்தைபோக்க சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, நந்திநகா் பகுதியில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.