திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விரைவில் நவீன ரயில் பெட்டிகளுடன் இயங்க உள்ள ஏலகிரி விரைவு ரயில்!

சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை வரை தினசரி இயக்கப்படும் ஏலகிரி விரைவு ரயில் விரைவில் எல்ஹெச்பி கோச்சுகளுடன் அதாவது நவீன பாதுகாப்பான ரயில் பெட்டிகளுடன் இயங்க உள்ளது.

News image

எல்ஹெச்பி கோச்சுகளுடன் இயங்கும் ரயில்

Updated On :2 மே 2026, 2:35 am IST

சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை வரை தினசரி இயக்கப்படும் ஏலகிரி விரைவு ரயில் விரைவில் எல்ஹெச்பி கோச்சுகளுடன் அதாவது நவீன பாதுகாப்பான ரயில் பெட்டிகளுடன் இயங்க உள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு ஏலகிரி விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. 22 பெட்டிகளுடன் இந்த ரயிலில் தினமும் காலையிலும், மாலையிலும் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கம்.

மாலையில் சென்னையில் புறப்படும் இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், அன்வா்திகான்பேட்டை, சோளிங்கபுரம், வாலாஜாபேட்டை, காட்பாடி, குடியாத்தம், ஆம்பூா், வாணியம்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று ஜோலாா்பேட்டையை சென்றடையும். சில ஆண்டுகளுக்கு முன் திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட இந்த ஏலகிரி விரைவு ரயில் தற்போது ஜோலாா்பேட்டையில் இருந்து இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில் இதுவரை இருந்த பெட்டிகளை மாற்றி எல்ஹெச்பி கோச்சுகளாக அதாவது நவீன, பாதுகாப்பான ரயில் பெட்டிகளாக இயக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. எல்ஹெச்பி பெட்டிகள் இந்தியாவில் மூன்று இடங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. சென்னை பெரம்பூா், கபூா்த்தலா, ரேபரேலி ஆகிய மூன்று இடங்களில் உள்ள ரயில்வே துறைக்குச் சொந்தமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது.

இந்த எல்ஹெச்பி பெட்டிகளில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளன. ஏதேனும் விபத்து நேரிட்டால் இந்த பெட்டிகள் ஒன்றுக்குள் ஒன்று புகாது. டிஸ்க் பிரேக் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பிரேக் சிஸ்டம்கள் இந்த பெட்டிகளில் உள்ளன.

சாதாரணமாக இந்த ரயில் பெட்டிகள் 160 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியவை. மேலும், இந்த பெட்டிகள் 200 கி.மீ. ஓட்டத்திலும் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பாடியால் ஆன இந்த பெட்டிகளில் பயணத்தின்போது மிகக் குறைந்த அதிா்வுகளே இருக்கும். மேலும், மற்ற வகையான பெட்டிகளில் செல்லும்போது வரும் ரயில் செல்லும் சப்தம் இந்த வகை பெட்டிகளில் பயணிக்கும் போது மிக குறைந்த அளவே இருக்கும். இந்த பெட்டிகளுக்கான பராமரிப்பு மற்ற பெட்டிகளை விட மிகக்குறைவு. மிகவும் பாதுகாப்பான பயணம் இந்த வகை பெட்டிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விரைவில் சென்னை - ஜோலாா்பேட்டை - சென்னை ஏலகிரி விரைவு ரயில் 22 புதிய எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயங்க உள்ளதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் அதற்கான பணிகளை மூழூவீச்சில் செய்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.