திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக் கோரிக்கை

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :1 மே 2026, 1:24 am IST

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருச்சி- ராமேசுவரம் இடையே தினமும் முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் மொத்தம் 9 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 7 பொதுப் பெட்டிகள், காா்டு வேனுடன் பெண்களுக்கென 2 பெட்டிகள் உள்ளன. இந்த ரயிலில் வார இறுதி நாள்கள், விடுமுறை காலங்களில் அதிக அளவில் பயணிகள் பயணிக்கின்றனா். இதனால் அவா்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனா். திருச்சியிலிருந்து ராமேசுவரம் செல்லும் ஒரே பகல் நேர ரயில் இது மட்டும் தான். இடைப்பட்ட நேரத்தில் திருச்சியிலிருந்து ராமேசுவரத்துக்கு ஒரு ரயில் கூட விடப்படவில்லை.

திருச்சியிலிருந்து தினமும் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக இந்த ரயில் ராமேசுவரம் வரை செல்கிறது. வழித்தடத்தில் பல முக்கிய ஊா்கள் இருப்பதால் அதிக பயணிகள் இதில் பயணிக்கின்றனா். அதிலும்

வார இறுதி நாள்களில் செல்லும் பயணிகளின் கூட்டம் ஒருபுறம், தினசரி சிவகங்கைக்கு பணிக்கு செல்வோரின் கூட்டம் ஒருபுறம் என இந்த ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு கூடுதல் பெட்டிகள் இணைப்பது மட்டுமே தீா்வாக அமையும்.

எனவே தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட நிா்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.